We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Wednesday 24 November 2010

இந்தியாவில் அவமானம், இலங்கையில் கொண்டாட்டம்.

ஜமாலியின் இலங்கைப் பயணமும், வெற்றி விழா(?)வும்.
இந்தியாவில் அவமானம், இலங்கையில் கொண்டாட்டம்.
Source: http://rasminmisc.blogspot.com/2010/11/httprasminmisctk.html
 பரேலவிகளின் வழிகெட்ட கொள்கைக்கு ஏகபோக சொந்தக்காரர் என்றால் அதில் முதல் இடம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்ற பரேலவிக்குத் தான் கிடைக்கும்.

கப்ருவணக்கம்,தட்டு,தாயத்து,கத்தம்,பாத்திஹா,தர்கா,உரூஸ்,கந்தூரிஎடுத்தல்,மத்ஹபு குப்பைகளுக்கு வக்காலத்து வாங்குதல் இப்படி இஸ்லாமிய மார்க்கத்தில் எதுவெல்லாம் தடை செய்யப் பட்டதாக இருக்குமோ அத்தனையையும் ஆகுமாக்கும் ஓர் பித்அத் வாதி.

கடந்த காலங்களில் தவ்ஹீத் ஜமாத்தின் எழுச்சியால் பல இடங்களில் பரேலவிகளுடைய கொள்கைகள் அடித்துத் தரை மட்டமாக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்விடம் தேவையை முன்வைக்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ரை வணங்கிக் கொண்டு, கப்ருகளிடம் தேவையை முன்வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்றைக்கு தூய்மையான ஏகத்துவ கொள்கையின் பால் வருவதற்கு தவ்ஹீதின் எழுச்சி தான் காரணமாக அமைந்தது.

ஆனால் சிலருக்கோ தாங்கள் கொண்ட கொள்கை தவறாக தெரிந்தும் கவுரவம் அவர்களைத் தடுத்து ஏகத்துவத்தை விட்டும் அவர்களை தூரமாக்கியது,தூரமாக்கிக் கொண்டிருக்கிறது.

இப்றாஹீம் நபியவர்களின் தந்தையின் நிலைதான் இவர்களுடைய நிலையாக இருக்கிறது.

நடந்த விவாதங்களும், நாற்றமெடுத்த கொள்கைகளும்.

இந்த பரேலவிகளுடன் தவ்ஹீத் ஜமாத் விவாதங்கள் செய்து இவர்கள் மூடர்கள் என்பதை மிகத் தெளிவாக விளக்கியது.

அதாவது நம்மைப் படைத்து பாதுகாக்கும் இறைவன் உருவமற்றவன் என்ற அத்வைத கருத்தை மக்கள் மத்தியில் பரப்பியவர்கள் இந்த பரேலவிகள் இவர்களிடம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபியவர்களின் வார்த்தைகள் மூலம் தெளிவாக நிரூபித்துக் காட்டியது தவ்ஹீத் ஜமாத்.

அதே போல் முழுக்க முழுக்க இறைவனுக்கு இணை வைத்து மக்களை வழிகேட்டிட்கு அழைத்துக் கொண்டிருக்கும் இந்த பரேலவிகள் தவ்ஹீத் வாதிகள் தான் இணை வைக்கிறார்கள் என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக விவாதிக்க வந்தார்கள்.

அந்த விவாதமும் ஜமாலியின் சமாலிப்பாகவே நிறைவுற்று தவ்ஹீத் ஜமாத் சொல்வது சத்தியம் என்ற பேருண்மை நிலை நாட்டப்பட்டது.

பி.ஜெ மொழி பெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் ஆபாசங்கள் இருப்பதாகவும் தாங்கள் கையில் வைத்திருக்கும் மத்ஹபுகள் சரியானைவைகள் என்றும் வாதாட வந்தவர்களால் ஒரு ஆபாசத்தைக் கூட பி.ஜெயின் மொழியாக்கத்தில் இருந்து எடுத்து வைக்க முடியாமல் போனது.

அது போல் மத்ஹபு குப்பைகளில் உள்ள ஆபாசங்களையும் அபத்தங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியல் போட்டுக் காட்டினார்கள் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறி புத்தி பேதலித்தவனைப் போல் விவாதக் கலத்தில் உளரியது பரேலவிகள் தரப்பு.

ஒன்றுக்குப் பின் முரனாகப் பேசி மக்களை வழி கெடுத்து கொண்டிருப்பதில் மிக முக்கிய பங்கு இந்த பரேலவிகளுக்கும் ஜமாலிக்கும் தான் என்று வீடியோ அதாரங்கள் விவாதக் கலத்தில் போட்டுக் காண்பிக்கப் பட்டு சத்தியம் நிரூபிக்கப்பட்டது.

திருக்குர்ஆனை இமாம்கள் சரியாக விளங்குவார்கள் நாம் சரியாக விளங்க முடியாது என்று வாதிட வந்தவர்களிடம் இமாம்கள் என்று சொல்பவர்கள் விளங்கிய லட்சனம் எடுத்துக் காண்பிக்கப் பட்டு கேள்வி கேட்கப் பட்ட போது பதில் இல்லாமல் தடுமாறிய காட்சியை வீடியோவில் பார்க்க முடியும்.

இப்படி அனைத்து விவாதத்திலும் தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்து வரும் சத்தியக் கொள்கை நிலை நிருத்தப் பட்டு அசத்தியம் அடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

இந்தியாவில் அவமானம் , இலங்கையில் கொண்டாட்டம்.

நேர்வழியில் இருக்கும் மக்களை வழிகேட்டிற்கு அழைக்க நினைக்கும் இந்த பரேலவிகளின் கொள்கை சுத்த வழிகேடுதான் என்பதை பல இடங்களில் தவ்ஹீத் ஜமாத் நிரூபித்துக் காட்டியது காட்டிக் கொண்டிருக்கிறது.

அதிலும் நடந்த விவாதங்களைப் பார்ப்பவர்களே பரேலவிகளின் கேடு கெட்ட கொள்கையையும் தவ்ஹீத் ஜமாத் வைத்த வாதங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறி மதில் பூனையாய் நின்றதையும் தெளிவாக அறிய முடியும்.

சென்னையில் விவாதம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே இலங்கையில் கல்முனைப் பகுதியில் விவாத வெற்றி விழா(?) மாநாடு ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அந்த விழாவுக்கு பிரதம அதிதியாக ஷேக் அப்துல்லாஹ் ஜெ(ச)மாலி அழைக்கப் பட்டு விவாதத்தில் வெற்றி பெற்றதாக கோஷம் எழுப்பப் பட்டுள்ளது.

விவாதத்தில் ஜமாலியின் நிலை எப்படி இருந்தது என்பது விவாதத்தைப் பார்க்கும் அனைவருக்கும் சாதாரணமாகவே புரியும்.

ஒவ்வொரு விவாதத்திலும் தவ்ஹீத் ஜமாத்தால் கேட்கப் பட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் சமாலிப்பையே மூலதனமாக வைத்திருந்ததைப் பார்த்து அவர்களது தரப்பு மக்களே முகம் சுழித்துப் போனார்கள்.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பேச வேண்டியவர் எதை சொன்னாலும் ஏதாவது சமாலிப்பையே சொல்லிக் கொண்டிருந்தது மட்டுமன்றி வெளியில் உளரியதை விட அதிகமாகவே விவாதக் கலத்தில் உளரிக் கொட்டினார்.

அவமானத்திற்கு மேல் அவமானப் பட்டு, நொந்து, நூலாகி இதற்குப் பின் தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதமே தேவையில்லை என்ற அளவிற்கு ஒரு கேள்விக்குக் கூட பதில் இல்லாமல் ஏன்டா விவாதத்திற்கு வந்தோம் என்று தானே நினைக்குமளவு கேவலப்பட்டு, விவாத அரங்கத்தை விட்டு வெளியேறிய ஜமாலியும் அவருடைய பரேலவி சகாக்களும் தமிழகத்தில் வெற்றிக் கோஷம் போட்டால் இனிமேல் இருக்கும் கொஞ்ச மானமும் காற்றில் பறந்து விடும் என்பதைப் புரிந்து கொண்டு இலங்கையில் சென்று வெற்றி வெற்றி என்று கூப்பாடு போட்டுள்ளார்கள் பாவம்.

இந்தியாவில் அவமானம் இலங்கையில் வெற்றிக் கோஷமா ?

தான் பட்ட அவமானத்தை தானே கொண்டாடிய ஒரே ஆள் இந்த சமாலியாகத் தான் இருக்க முடியும்.

இறைவன் திருமறைக் குர்ஆனில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியைப் பற்றியும் அவருடைய பரேலவியாக்கள் பற்றியும் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

(ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்களது உள்ளங்களிலும் செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.(2:6,7)

அவர்களுடைய உள்ளங்களை இறைவன் முத்திரையிட்டுவிட்டதாக மேற்கண்ட வசனம் தெரிவிக்கிறது.

அதே போல் இவர்களுடைய பிரச்சார வார்த்தைகளையும் இறைவன் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.அதாவது மக்களுக்கு மத்தியில் இவர்கள் ஒரு முஸ்லிமைப் போன்று தங்களை ஜாடை செய்து காட்டுவார்கள் ஆனால் உண்மையில் இவர்களுக்கும்  முஸ்லீம்களின் ஏகத்துவத்திற்கும்; எந்த விதத்திலும் தொடர்பிருக்காது.

'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பினோம்" எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல்லாஹ்வையும் நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லைஅவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(2:8-10)

மார்க்கத்தில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதில் முதல் இடம் இவர்களுக்குத் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதே போல் மார்க்கத்தில் இப்படி பொய்யான தகவல்களை நுழைக்கிறீர்களே என்று அவர்களிடம் சொன்னால் நாங்கள் மக்களை சீர்திருத்தம் செய்பவர்கள் என்று தான் இந்த பரேலவிக் கூட்டமும் சொல்கிறது.

அதை அப்படியே இறைவன் சொல்லிக் காட்டுவதைப் பாருங்கள்.

'பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!" என்று அவர்களிடம் கூறப்படும் போது 'நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே" எனக் கூறுகின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள் எனினும் உணர மாட்டார்கள்.(2:11,12)

நாங்கள் தூய ஏகத்துவத்தின் பக்கம் விரைந்து வந்ததைப் போல் நீங்களும் இந்தத் தவ்ஹீத் கொள்கையை ஏற்று குர்ஆனும் ஹதீஸ{ம் மாத்திரம் தான் நேர்வழி என்ற தூய கொள்கைக்குள் வாருங்கள் என்று அவர்களை நாம் அழைக்கும் போது நீங்கள் மடையர்கள் நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மூதாதையர்களையும், மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள் இதனை அப்படியே இறைவனும் கூறிக் காட்டுகிறான்.

இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!" என்று அவர்களிடம் கூறப்படும் போது 'இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?" எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.(2:13)

ஏகத்துவத்தைப் பேசும் போது கப்ருகளை வணங்கக் கூடாது என்று வாயளவில் பேசி விட்டு தர்காக்களில் கூப்பாடு போடுகிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே" எனக் கூறுகின்றனர்.(2:14)

அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான் அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.(2:15)

இவர்கள் யார் என்பதை இறைவனே நமக்குத் தெளிவாக அறிவித்துத் தருகிறான்.

அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.(2:16)

இவர்களுக்காக இறைவன் சொல்லும் உதாரணத்தைப் பாருங்கள் அச்சி அசலாக ஜமாலியும் அவரது சமூகமும் இதில் உள்ளடங்குவதைப் பார்க்களாம்

ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அவர்களின் ஒளியைப் போக்கி பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழி கேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. (இவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.(2:17)

குறிப்பு :

இறுதியாக நடந்த இரண்டு விவாதங்களும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் டி.வீ.டி க்கலாக வெளியிடப் பட்டுள்ளது.

அது போல் சகோதரர் பி.ஜெயின் அதிகாரப் பூர்வ இணையதளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. 

ஆனால் ஜமாலியினானோ அவருடைய பரேலவி அமைப்பினாலோ இதுவரை இந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை.

தான் அவமானப் பட்டதை தானே வெளியிட்டால் அது தனக்கே அவமானமாக ஆகாதா? அதுதான் வெளியிடவில்லை போலும்.
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out