We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Sunday 16 January 2011

கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு

தங்கள் மீது, ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியப்படவும், தாங்கள் நேர்வழி பெறவும், பிரார்த்தித்துக் கொள்கிறோம்.(மாற்றுக் கருத்துடையோர்க்கும் பிரார்த்திப்பது எங்கள் மரபு) வாசிப்பு வாசனையற்ற எத்தனையோ திரைக்கூத்தாடிகளுக்கிடையே, ஆழமான வாசிப்பாளராக, மனிதநேயராக, மதமாச்சரியம் அற்றவராக, சாதி கடந்தவராக, தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள். சினிமா, என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் உச்சத்தில் இருக்கும் தாங்கள், சிதைக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை மேலும், சிதைப்பதிலும், சீண்டுவதிலுமா உங்கள் கலைஞநானத்தையும், ஆற்றலையும் காட்ட வேண்டும்.


முஸ்லிம்கள் மீதான ஊடக வன்முறையின் உச்சகட்டமாக, உங்களதுஉன்னைப்போல் ஒருவன்படம் அமைந்தது. தங்களை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். சுமார் ஒரு மணிநேரம் நான் முஸ்லிம் எதிர்ப்பாளன் அல்ல என்று விளக்கினீர்கள்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த நன்றொன்று உள்ளக் கெடும்‘ (கொல்கிற அளவுக்குக் கொடுமை செய்தவரானாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து, மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும், என்பார் வள்ளுவர்.)

உன்னைப்போல் ஒருவன்எங்களைக் காயப்படுத்திய படம் என்பது தான் இப்போதும் எங்கள் நிலை. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு நேரத்தில், மனிதநேயத்தோடு தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும், மும்பை கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து துணிவோடு குற்றம் சாட்டியதையும், நாங்கள் நினைத்துப் பார்த்தோம், நீங்களும் அதை நினைவூட்டினீர்கள்.

இப்போது, முதல்வர் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்மன்மதன் அம்புவந்துள்ளது. உங்கள் அம்பு சரியாகவே பாய்ந்துள்ளது. அது தந்த வலிகளே இந்தக் கடிதம்..

அம்புபடத்தில் வாகன விபத்தில் இறந்துபோன உங்கள் முதல்மனைவி (ஜுலியட்) பற்றி, கதாநாயகியிடம் சொல்லும்போது, காஷ்மீரில்லஷ்கர் தொய்பாபயங்கரவாதிகள் அந்தப் பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரை மீட்பதற்கு ராணுவ மேஜரான நீங்கள் இரண்டு வீரர்களை பலி கொடுத்ததாகவும் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்?

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து அழகான பெண் வந்தால் கடத்தி வைத்துக் கொள்வார்கள். பெண்களைப் பெரிதும் மதித்து, துதித்துப் பெண்ணியம் போற்றும் (?) நமது பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்டப் பெண்ணை உயிரைப் பணயம் வைத்து மீட்பார்கள்? என்று தானே சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் மீட்பர்களின் லட்சணத்தை உண்மை யிலேயே அறிந்துள்ளீர்களா? கமல்.

பேரா..மார்க்ஸ், எழுதியுள்ளகாஷ்மீர் என்னதான் நடக்கிறது அங்கே, என்ற நூலைப் படியுங்கள்.

நட்சத்திர விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எழுதப்பட்ட எழுத்தல்ல அது, திகிலூட்டப்பட்ட காஷ்மீருக்கு, உண்மை அறியும் குழுவோடு நேரில் சென்று பார்த்த உண்மைகள் அவை.

காஷ்மீரில் தொடரும் துயரம் என்ற நூலையும் படியுங்கள்.

அருந்ததிராய், பேரா.கீலானி உள்ளிட்ட மனிதஉரிமைப் போராளிகளின் காஷ்மீர் குறித்த கருத்துகளை வாசியுங்கள்.

காஷ்மீரில் ஷோபியான் என்ற இடத்தில் முஸ்லிம் இளம்பெண்களை உங்கள் மீட்பர்கள் பாலியல் வன்மம் செய்து கொன்ற செய்தி எல்லா ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்ததே...

கலைஞானி அவர்களே.. கண்ணுறவில்லையா?

காஷ்மீரில், குறைந்தபட்சத் தண்டனையே மரண தண்டனைதான் என்பதையும், காஷ்மீரியாகப் பிறந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு தண்டனைதான் என்பதையும், இதற்கெல்லாம் காரணம் அந்த மீட்பர்கள் என்பதையும் அறியாமலா இருக்கிறீர்கள்? நிச்சயமாக அறியாமல் இருக்க மாட்டீர்கள் பிறகு ஏன்.?

லஷ்கர் தொய்பாவை திட்டினால் உங்களுக்கேன் வருத்தம்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தான் என்ற நாசகர ஆக்ரமிப்பு சக்தியின் ஆதரவோடு காஷ்மீரில் இயங்கும் எந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அதே நேரத்தில், தங்களது வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் காஷ்மீரிகளை கொச்சைப்படுத்தவும் மாட்டோம்.

காஷ்மீரி என்றாலே அவன்லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவன் என்று முத்திரைக் குத்திதான்மீட்பர்களின் துப்பாக்கிகள்அந்த அப்பாவியைப் பலியிடுகின்றன. காஷ்மீர்ப் பெண்களை அன்றாடம் சூறையாடுகின்றன.

காஷ்மீரிகளின் வீடுகளை இடித்துத் தகர்க்கின்றன. சந்தேகத்தின் பேரில் சிறுவர்களையும் கொன்று குவிக்கின்றன.

காஷ்மீரிகளை, இந்த மீட்பர்கள் பொது இடங்களின் வைத்து பெண்களைப் பாலியல் வன்முறை செய்தாலும், அப்பாவிகளைப் படுகொலையே செய்தாலும் யாரும் கேட்க முடியாது.

மீட்பர்களை இப்படி ரட்சிக்கிறது ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம். மாநில அரசு கூட இந்த சீருடைப் பயங்கர வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சீருடைக் கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. 2009ம் ஆண்டு மட்டும் 350 முறை காஷ்மீர் மாநில அரசால் அனுமதி கேட்கப்பட்டு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலங்களையெல்லாம், சக்திவாய்ந்த ஊடகத்தின் சகலகலா வல்லவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரன்ஹீட் 9/11 போன்ற படம் எடுக்கும் கலைஞர்களும், ஹிட்லரையே மிரளவைத்த திரைக்கலைஞர் சார்ளி சாப்ளினும் தமிழகத்தில் இல்லையே...

மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகள் கடத்தப்பட்டதைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் மருமகன் மணிரத்னம்ரோஜாபடம் எடுத்தார். காஷ்மீரிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொதுப் புத்தியில் பதிய வைத்தார்.

அன்றாடம் நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளம் பெண்கள் பாதுகாப்புப் படையால் கடத்தப்பட்டு, சிதைக்கப்படுகிறார்களே உங்கள வர்கள் அதைப்படமாக எடுத்த துண்டா?

நீங்கள் கறுப்பு சட்டைக்காரராகவும், இருக்கிறீர்கள், சமயத்தில் சிவப்புச் சிந்தனையும் பேசுகிறீர்கள். கறுப்பு, சிவப்போடு சேர்ந்தும், காட்சி தருகிறீர்கள், படமும் தருகிறீர்கள்.

யாரும் விரும்பிய வண்ணத்தை எங்கள் மீது பூசுவதற்கு வசதியாக நாங்கள் வெள்ளையாக, வெள்ளந்தியாக நிற்கிறோம்.

குடிபோதையின் உச்சத்தில் மகன் அம்மாவுக்கு தொலைபேசி.. நீங்கள் ஜீனியஸ், நாஸ்ட்ரா டாமஸ், கருநாக்கு தேவதை என்கிறான். அதற்கு அம்மா, “பார்ல இருக்கியா, போறுண்டா சாப்டது, வீசிங் வந்துரும், ஆத்துக்கு வந்துடுஎன்கிறார்.

சிவப்புச் சிந்தனையாளரான மாவோ, சீனாவில் செய்தது கலாச்சாரப்புரட்சி, அன்பே சிவம் படத்தில் காம்ரேடாகசிவப்புச் சிந்தனைபேசிய நீங்கள் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தமிழகத்தில் விதைக்கிறீர்கள்...

கட்டிக்கப் போறவனுக்குக் கடுக்காக் கொடுக்கு

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் (சூரத்துல் ஹுஜுராத் 49:10) .

அல்லாஹ் முஹ்மின்கள் (அல்லாஹ்வையும்,அவனது தூதரையும், நபி (ஸல்) சொன்ன மற்றும் செய்த பிரகாரம் நம்பிக்கைக் கொண்டவர்கள்) அனைவரும் சகோதரர்கள் என்று சொல்லுகிறான்..

ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, வசை பாடி, ஒருவரின் கண்ணியத்தை மற்றவர் சீர் குலைத்து, ஒருவர் மற்றவரைக் கேவலப்படுத்தி,   இதெல்லாம் கற்றுத் தந்தது யார்?? அல்லாஹ்வா அல்லது அவன் தூதரா?? 

குர் ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் விளக்கம் தேவை...            
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out