We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Wednesday 15 June 2011

துபாய்! துபாய்!! துபாய்!!!

பல நாடுகளை
ஏற்கனவே பார்த்து விட்டாலும், இதோ வெகு அருகிலேயே இருக்கும் துபாய் மற்றும் இலங்கையை இன்னும் பார்க்கவில்லை என்ற குறை எனக்குள் ரொம்ப நாட்களாக இருந்து வந்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் இலங்கைக்கு சென்றுவிட்டு வந்து, "என்னடா, அப்பிடியே கேரளாவுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு," என்று சொல்லவே, இலங்கை செல்லும் ஆசை குறைந்துவிட்டது.

துபாய் செல்லும் சந்தர்ப்பம் கடந்த 30 ம் தேதி கிட்டியது. என்னுடைய அலுவலக வேலை நிர்பந்தத்தின் காரணமாக என்னுடைய பெரும்பாலான பயணங்கள் தனியாகவே அமைந்துவிடும். ஒரு சில பயணங்கள் என் நெருங்கிய நண்பர்களுடன். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று வந்தேன்.

துபாயில் காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளிவந்தபோது ஏதோ அடுப்புக்குள் வந்த மாதிரி ஒரு சூடு. உடனடியாக காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். என் மனைவி தீவிர சைவம் என்பதால், ஒரு வேளை சாப்பிட சரியாக கிடைக்காவிட்டால் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சர்விஸ் அப்பார்ட்மென்ட்டை புக் செய்து வைத்திருந்தேன். நல்ல காற்றோட்டமாக, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் என்று சகல வசதிகளுடன் இருந்த அந்த  சர்விஸ் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்தவுடன் என் மனைவிக்கு குஷி வந்துவிட்டது. சாப்பாடு சரியில்லை என்றால் நானே சமைத்து விடுகிறேன் என்று சொல்லியவுடன், ஒரு நாள் வாடகை நம் இந்திய மதிப்பில் ரூ.14,000/- என்றாலும், நானும் குஷியாகிவிட்டேன்.

துபாய் நண்பர் வெங்கடேஷ் அருகிலிருக்கும் சுக் சாகர் என்ற இந்திய உணவகத்துக்கு அழைத்து சென்றார். சூடாக இட்லி, வடை சாப்பிட்ட பிறகு துபாயில் 5 நாட்களை கடத்திவிடலாம் எனத் தோன்றியது. ஒரு பாலைவனத்தை இப்படி ஒரு மெகா நகரமாக மாற்றி அமைத்ததற்காகவே துபாய் அரசை பாராட்டவேண்டும். தண்ணீர், காய்கறிகள், பழங்கள், அரிசி அனைத்து பொருட்களுமே இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் என்றாலும் எதிலுமே குறை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எல்லாமே ரொம்ப, ரொம்ப விலை அதிகம். எனக்குத் தெரிந்து துபாயில் விலை குறைந்த ஒரே சமாசாரம் பெட்ரோல்தான். ஒரு லிட்டர் கிட்டத்தட்ட ரூ.22 என்று கேட்டவுடன் பேசாமல் ஒரு டேங்கர் பெட்ரோலை சென்னைக்கு கடத்தினால் என்ன என்று கூட அபத்தமாக தோன்றியது. பல நாடுகளில் பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால், மாறுதலுக்கு வேறு எங்காவது செல்லலாம் என்று துபாய் தங்க வீதிக்கு (கோல்ட் சூக்-gold souk ) சென்றோம். ஜாய் ஆலுக்காஸ் இங்கும் பெரிய கடை ஒன்றைத் திறந்து அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் இலவசம் என்று கூவி, கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். தங்கம் வாங்கும் ஆசை இருந்தாலும், டப்பு அதிகமில்லை என்பதால் "விண்டோ ஷாப்பிங்" செய்துவிட்டு (பிளாட்டினம் காயின் முதற்கொண்டு எல்லாம் கிடைக்கிறது), வண்டி ஏறினோம்.

ஆனால், சில பிரபல மால்களையும் விடவில்லை. துபாய் மால், தேரா மால், எமிரேட்ஸ் மால் ஆகியவை மிக பிரமாதமாக இருக்கின்றன. துபாய் ஷேக்குக்கு துட்டு அதிகம் என்ற காரணத்தினால், ஊரையே ஏசி செய்து வைத்ததோடு நில்லாமல், பஸ்சுக்கு காத்திருக்கும்போதும் பொது மக்கள் வெயிலில் வாடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பஸ் ஸ்டாப் வரை ஏசி செய்திருக்கிறார் (படம் கீழே);


மறுநாள், துபாய் பாலைவனத்திற்கு சென்றோம் (Desert Safari ). எல்லாமே இருந்தும் சுற்றுலா மூலம் நல்ல வருவாய் வரும் என்று தெரிந்தும், சர்வ அலட்சியத்துடன் இருக்கும் நாம் எங்கே, வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் விதவிதமான சுற்றுலா திட்டங்களை வைத்து வெளிநாட்டு பயணிகளைக் கவரும் துபாய் எங்கே! பாலைவன சவாரி, அதிகாலையில் பாலைவனத்தில் இருந்து பெரிய, பெரிய பலூன்கள் மூலம் சூரிய உதயத்தை ரசிக்க பிரமாதமாக ஏற்பாடுகள், பாலைவனத்தில் இரவு பிரத்யேக கூடாரங்களில் தாங்கும் வாய்ப்பு, இரவு நடனத்துடன் (belly dance ) உணவு என்று ஏராளமாக இருக்கின்றன.




பாலைவன மணலில் சும்மா சர்வ சாதாரணமாக ஒரு கையிலேயே காரை ஓட்டிய (மறு கையில் செல் போன்) அந்த ஓட்டுனரைப் பாராட்டவேண்டும். 

மறு நாள் அலுவலக வேலையாக துபாய் இண்டர்நேஷனல் ட்ரேட் சென்டர் வரை சென்று விட்டு, மதியம் உலகின் மிக உயரமான கட்டிடமான "புர்ஜ் காலிபா (Burj Khalifa ) சென்றோம். 


ஏறத்தாழ 2718 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 164 மாடிகள் உள்ளன. பொதுமக்கள் 124 மாடிகள் வரைதான் அனுமதிக்கப்படுகிறார்கள்.  உலகின் மிக உயரமான கட்டிடம் என்பது தவிர மேலும் சில பெருமைகளும் இதற்கு உண்டு:
  • உலகின் மிக உயரமான தனித்த கட்டிடம் (tallest free - standing )
  • உலகில் அதிக மாடிகள் உள்ள கட்டிடம்
  • உலகில் அதிக உயரத்துக்கு செல்லும் மின்-தூக்கி (lift )
  • உலகில் அதிக உயரத்தில் இருக்கும் கண்காணிப்பு மேடை (observation  desk )
இந்தக் கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது துபாய் பரப்பளவில் எவ்வளவு சிறியது என்பது தெரிகிறது. 





பெட்ரோல் வளம் அதிகம் என்பதால் தங்கம் கூட ATM மெஷின் மூலம் கிடைக்கிறது. (படம் கீழே)


துபாயில் திருட்டு பயம் என்பது அறவே கிடையாது. திருட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. பெட்ரோல் விலையும், கார்கள் விலையும் குறைவு என்பதால் சிறிய கார்களைக் காண்பது அரிதாகவே இருந்தது. 

சாலைகள் மிக சுத்தமாக, பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன (நம் சென்னை நெரிசலோடு  ஒப்பிடும்போது அப்படித் தெரிகிறதோ?) 






நான் சந்தித்த வரையில் இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) சற்று அதிருப்தியாகவே இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்தும் விலைவாசி மிக அதிகம் என்பதால் சேமிப்பு குறைவாகவே இருக்கிறது, குடும்பத்துடன் இருப்பது மிக கஷ்டமான காரியம் என்கிறார்கள்.
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out