We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Tuesday 7 December 2010

நபி வழியில் அழகிய துஆக்கள் - Du'a for all

தூங்குவதற்கு முன்
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி (மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)
யா அல்லாஹ்! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! யா அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும் விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இன்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அவை உன் கையில்தான் உள்ளது. யா அல்லாஹ் நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்கு பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். எதுவும் உனக்குமேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். எதுவும் உனக்கு கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களை செல்வந்தர்களாக்குவாயாக! நூல்: புகாரி
யா அல்லாஹ்! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். உன் பெயரால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்: புகாரி
யா அல்லாஹ்! நீயே தூயவன். உன்னால்தான் எனது உடலை சாய்க்கிறேன். உன்னால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்ல அடியார்களை பாதுகாப்பதுபோல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்:முஸ்லிம்
தூங்குவதற்குமுன் ஆயத்துல் குர்ஸீயை ஓதிக்கொண்டால் விடியும்வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். அல்குர்ஆன் 2:255
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்கு செல்லும்போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து அல்குர்ஆன்  112,113,114  அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். நூல்: புகாரி
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌاللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْوَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ  
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِوَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ
பகரா அத்தியாத்தின் கடைசி இரு வசஙனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّه ِِ وَالْمُؤْمِنُونَ كُلّ ٌ آمَنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِه ِِ وَكُتُبِه ِِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَد ٍمِنْ رُسُلِه ِِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِير
இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். அல்குர்ஆன் 2:285

لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسا ً إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ً كَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" அல்குர்ஆன் 2:286
யா அல்லாஹ்! என் முகத்தைச் உனக்கு கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உனது (அருளில்) நபிக்கை வைத்து விட்டேன்.உனது (உனது தண்டணைக்கு)அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. யா அல்லாஹ்! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். நூல்: புகாரி

தூங்கி விழித்தபின்
நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்
All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection
என் உடலில் ஆரோக்கியத்தை தந்து, என் உயிரையும் எனக்கு திருப்பி தந்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியும் வழங்கியவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நூல்: திர்மிதீ 5/473
All praise is for Allah who restored to me my health and returned my soul and has allowed me to remember Him.

கழிவரையில் நுழைகின்றபோது
بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )
யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி, முஸ்லிம்
(In the name of Allah). O Allah, I take refuge with you from all evil and evil-doers.
கழிவரையிலிருந்து வெளியேறுகின்றபோது
غُفْـرانَك
உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
I ask You (Allah) for forgiveness.

உளுச் செய்யும்முன்
بِسْمِ الله
அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு - In the name of Allah.
உளுச் செய்தபின்
أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’
اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.
அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ
O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.
سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .
யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.

உண்ணும்முன், பருகும்முன்
بِسْمِ اللَّهِ
அல்லாஹ்வின் பெயரால் - In the Name of Allah
اللَّهُمَّ بَارِكْ لَنا فِيهِ وَ اَطْعَمْنَا خَيْرًا مِنْه
அல்லாஹ்! அதில் எங்களுக்கு நீ அபிவிருத்தி செய்வாயாக! அதைவிடச் சிறந்ததை எங்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக! நூல்: திர்மிதி 5/506
O Allah! Bless us in it and provide us with better than it
 பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللَّهِ فِي اَوَّلِهِ وََآخِرهِ
அல்லாஹ்வின் பெயர் கொண்டு அதன் தொடக்கம் அதன் முடிவு நூல்கள்: அபூதாவூத் 3/347 திர்மிதி 4/288
In the Name of Allah, in the beginning and in the end

உணவு உண்டபின்
الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ
என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless
உணவளித்தவருக்காக
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم
யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615
O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them
اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي
அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126
O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink

வீட்டிலிருந்து புறப்படும்போது
بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah
اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .
யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா
‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally
வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .
அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது
யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!
Oh Allah! Open for me the gates of Your mercy
பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது
யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்
O Allah! I am asking You to give me from Your Bounty

சபையை முடிக்கும்முன்
  

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  நூல்: திர்மிதீ 


سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ 

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  நூல்: நஸயீ


துக்கம் கவலையின்போது
அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158
சங்கடம் நீங்க
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092
யா அல்லாஹ்! உன் அருளையே ஆதரவு வைக்கிறேன். ஆகவே கண் இமை மூடும் அளவிற்குக்கூட என்னை என் மனதின்பால் ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடைய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்கு நீ சீராக்ககி வைப்பாயாக! வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு) இல்லை. நூல்கள்: அபூதாவூத் 4/324 அஹ்மத் 5/42
உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். அல்குர்ஆன் 21:87
அல்லாஹ், அல்லாஹ்வே என் இரட்சகன், அவனுக்கு எப்பொருளையும் நான் இணையாக்கமாட்டேன். நூல்கள்: அபூதாவூத்2/87 இப்னுமாஜ்ஜா 2/335
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out