We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Tuesday 4 January 2011

தண்ணீரில் உயிர்வாழும் மீன்கள் ஓர் அற்புதம்

Saturday, January 1, 2011
தற்காலம் இவ்வுலகில் உள்ள மீன்களும், முந்தைய காலத்தில் வாழ்ந்த மீன்களும் ஒரே அமைப்பில்தான் இருக்கின்றன என்பதை இந்தப் படங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
 
 
தண்ணீரில் வாழும் மீன்கள் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் நீந்துவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மீன்கள் நீந்துவதற்காக அவைகள் தங்களது வாலை பக்கவாட்டில் அசைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இத்தனை எளிதாக மீன்கள் நீந்துவதற்கு படைப்பாளன் அல்லாஹ், மீன்களுக்கு வழங்கியிருக்கும் விரைவாக அசையக்கூடிய முதுகெலும்பிற்காகவும், அவைகளில் உடலில் அவைகள் பெற்றிருக்கும் மற்றுமுள்ள அமைப்புகளுக்காகவும் அவைகள் வல்லோன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மீன்கள் தண்ணீரில் நீந்தும்போது அதிகமான சக்தியை இழக்கிறது. இவ்வாறு மீன்கள் அதிகமான சக்தியை இழப்பது, நாள் முழுவதும் தண்ணீரில் நீந்துவதால் அல்ல. அவைகள் தண்ணீரில் ஒரே இடத்தில் நிற்காமல் இருக்க வேண்டுமெனில் மிக வேகமாக நீந்தியே ஆக வேண்டும். அத்தோடு மீன்களை உணவாக உட்கொள்ளும் மற்ற நீர்வாழ் உயிரினங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மீன்கள் மிக வேகமாக நீந்துவது அவசியமாகிறது.
மேலும், அதிகமான நேரங்களில் மீன்கள் எதிர் நீரோட்டத்தில் நீந்துகின்றன. தண்ணீரில் வேகமாக நீந்துவது எத்தனை கடினமானது, அதே வேளையில் தெருவில் நடந்து செல்வது எத்தனை எளிதானது என்று எண்ணிப் பாருங்கள். நிலத்தில் உயிர் வாழ்வதையும், தண்ணீரில் உயிர்வாழ்வதையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும் தண்ணீரில் வாழ்வது எத்தனை கடினமானது என்று.
இவ்வாறு மீன்கள் தண்ணீரில் நீந்துவதற்கு உரிய சக்தியை கொடுப்பது, மீன்கள் தங்கள் முதுகெலும்பிலும், தசையிலும் கொண்டிருக்கும் பிரத்யேக அமைப்பாகும். மீனின் முதுகெலும்பில் துடுப்புகளும் தசைகளும் இணைக்கப்பட்டிருப்பதோடு, மீனின் உடலை நேராக வைத்திருக்க பயன்படுவதும் முதுகெலும்பாகும். முதுகெலும்பு இல்லையெனில், மீன்களால் தண்ணீரில் நீந்திச் செல்ல முடியாது. மேலும் மீன்கள் தண்ணீரின் முன்னும், பின்னும் மாத்திரம் நீந்துவதில்லை. மீன்கள் தண்ணீரில் அடிப்பகுதிக்கும், மேற்பரப்பிற்கும் நீந்த வேண்டும். இவ்வாறு மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கும், மேற்பகுதிக்கும் நீந்துவதற்கு அவைகளுக்கு முதுகெலும்பின் பிரத்யேக அமைப்பு மாத்திரம் போதாது. இதற்காக அவைகளின் உடலில் வேறொரு அமைப்பும் அவசியமாகிறது. அந்த அமைப்பையும் வல்ல அல்லாஹ் மீன்களுக்கு வழங்கியிருக்கிறான்.
மீன்களின் உடலில் காற்றுப்பைகள் உள்ளன. இந்த காற்றுப்பைகளில் உள்ள காற்றை வெளியேற்றுவதால், மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்லவும், மேலும் காற்றுப்பையை நிரப்பிக் கொள்வதால் மீண்டும் மீன்கள் தண்ணீரின் மேற்பகுதிக்கு வரவும் வசதியாக இருக்கிறது.
மீன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருந்தாலும், தண்ணீரால் அவைகள் எப்படி பாதிப்படையாமல் இருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?. மனிதர்களாகிய நாம் சில மணி நேரங்கள் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் பாதிப்படைவதை காண்கிறோம். இன்னும் சற்று அதிகமான நேரம் நாம் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவதை நாம் உணர்கிறோம். ஆனால் இந்த நிலை மீன்களுக்கு ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் மீன்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் கடினமான செதில்கள். இந்த செதில்கள் மீனின் தோல்களின் மேற்பகுதியில் அமைந்துள்ளன. மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிந்து விடாமல் தடுப்பது இந்த செதில்களின் வேலையாகும். மீன்களுக்கு செதில்கள் இல்லையெனில், மீன்களின் உடலும் தண்ணீரினால் பாதிக்கப்படும். மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிய ஆரம்பித்தால், மீன்கள் நீந்தமுடியாமல் நிலை தடுமாறும். இதன் காரணமாக மீன்கள் மரணமடையவும் நேரிடலாம். இருப்பினும் மீன்கள் தண்ணீரின் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல், தங்களது வாழ்க்கையை தண்ணீரிலேயே தொடர்கின்றன.
நீரில் வாழும் அனைத்து மீனினங்களும் மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றன. நீண்ட காலங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீனினங்களும் மேற்குறிப்பிட்ட அதே அமைப்பினை கொண்டிருந்தன. லட்சக்கணக்கான வருடங்களான மீன்கள் அதே வடிவமைப்பில்தான் இருக்கின்றன. இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அதன் உடலமைப்பில் எந்த பரிணாம மாற்றமும் இல்லை. இதனை லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீன்களின் எஞ்சிய மிச்சங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். தற்காலத்தில் உயிர்வாழும் மீன்களைப் போன்றே முந்தைய காலங்களில் வாழ்ந்து மறைந்து மீன்களும் உள்ளன என்பதை இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மீனின் படிவத்திலிருந்து (Fossils) (பார்க்க: படம்) அறிந்து கொள்ளலாம். உலகம் தோன்றிய நாள் முதலே மீனும் இவ்வுலகில்  இருக்கிறது என்பதற்கு இது ஆதாரமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மற்ற உயிரினங்களை படைத்தது போல் அல்லாஹ் மீனினங்களையும் இவ்வுலகத்தைப் படைக்கும்போதே படைத்திருக்கிறான். எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே அவைகளுக்குத் தேவையான எல்லா அமைப்புகளையும் வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அவனது படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்;லாஹ்; தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன்மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்;வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன2:164 (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன..2:164
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out