We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Monday 3 January 2011

தற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு!

‘தற்பெருமை கொண்ட மனிதன் உண்மையை மறைத்து மற்றவர்களிடம் உரையாடுவான். எனவே, தற்பெருமையானது ‘இறை நிராகரிப்பில்’ கொண்டு போய் விடும்.

‘எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ, அவன் சுவனம் புகமாட்டான்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.

‘பெருமை’ இறைவனைச் சார்ந்தது. அதில் பங்குபெற எவர் எண்ணினாலும், இறைவன் மன்னிக்கவே மாட்டான். ஒருவன் ‘உஹது மலை’ அளவு தங்கத்தை தர்மம் செய்ததாக எண்ணி பெருமையடிப்பானேயானால், அல்லாஹ் அவனது தர்மத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ‘தனது மனோ இச்சைப்படி நடப்பது, கஞ்சத்தனம் செய்வது, தற்பெருமையடித்துக் கொண்டு வாழ்வது ஆகிய மூன்று குணங்களைக் கொண்டு செயலாற்றுபவனை இறைவன் விரும்புவதில்லை.

‘காரூன்’ என்ற கொடியவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறிய தந்தை மகனாவான். ஆரம்ப நாட்களில் இவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைத்தூதராக ஏற்று ‘தவ்ராத்’ வேதத்தை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றான். இவனின் ஏழ்மை நிலை கண்டு, ‘இரும்பை பொன்னாக்கும் சித்தை’ நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பயனாக காரூன் பெரும் பெரும் செல்வந்தனாக உயர்ந்தான்.

‘இவனுடைய கருவூலங்களின் திறவுகோல்களை மட்டும் வலுமிகுந்த பலபேர் சிரமத்துடன் சுமக்க வேண்டியிருந்தது’ என அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான். காரூன் தனது செல்வ வளத்தை ஊர் மக்களுக்கு எடுத்துக்காட்டும் பொருட்டு செல்லுமிடமெல்லாம் கருவூல திறவுகோல்களை எடுத்துச்சென்று பெருமையடிப்பதைக் கண்டவர்கள், ‘காரூனுக்கு அல்லாஹ் வழங்கியது போன்று நமக்கும் வழங்க மாட்டானா?’ எனக்கூறி பொறாமைக் கொள்வர்.
 
இதுபோன்ற சொற்களை இக்காலத்திலும் மக்கள் பேராசைக்கொண்டு பேசித்திரிவதை நாம் காணத்தான் செய்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் நடத்திச் செல்வானாக!
 
காரூனின் செல்வ வளத்தைக் கண்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீ ஜகாத் (ஏழை வரி) வழங்கக்கூடிய தகுதியை அடைந்துள்ளதால், இவ்வாண்டு முதல் ‘ஜகாத்’ கொடுத்தே ஆக வேண்டும்’ எனக் கட்டளையிட்டார்கள். ஆனால். அவனோ அவர்கள் சொல்வதை மறுத்து எதிராக செயல்படத் துவங்கினான்.
 
‘ஒரு பெண்ணுக்கும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது. அப்பெண்ணை விபச்சாரம் செய்துவிட்டார்கள்’ என்ற பொய்யான ஒரு அவதூறை மக்கள் மத்தியில் கிளப்பி, அந்த வதந்தியை ஊர் மக்கள் நம்பம்படி செய்தான்.
 
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்பெண்ணிடம் நேருக்கு நேர் மக்கள் கூடியிருக்கும் அவையில் விசாரணை செய்கிறார்கள்.
‘காரூன் எனக்கு லஞ்சம் (கையூட்டு) கொடுத்து அவ்வாறு பொய் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். எனவே தகாத வார்த்தையைக் கூறிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்!’ என்று ஊரறிய அவள் கேட்டுக்கொண்டாள்.
 
இக்கூற்றைக் கேட்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிர்ச்சியுற்று, ‘பூமியே! காரூனைப்பிடி!’ எனக்கூற அவ்வாறே காரூனின் காலைப் பிடித்தது பூமி. (அதாவது அவனது காலை பூமி உள்ளிழுத்துக் கொண்டது). இதைக்கண்டு அலறினான் காரூன். ‘என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று கதறினான். ஒருமுறை இருமுறையல்ல! எழுபது முறை கெஞ்சினான்.
 
எனினும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனம் இரங்கவில்லை. இறுதியாக பூமி காரூனை முழுவதுமாக விழுங்கிவிட்டது.

எனவே, யார் ஒருவர் மனோ இச்சைப்படி நடப்பது, தர்மம் செய்யாது கஞ்சத்தனம் கொண்டு உலகில் வாழ்வதுமாகிய மூன்று விதமாகிய செயல்கள் செய்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
 
(நன்றி: முஸ்லிம் முரசில் வெளியான கட்டுரை)
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out