We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Monday 31 January 2011

200 பெண்களை மயக்கிய செக்ஸ் ஜோதிடர் கைது

E-mail அச்செடுக்க
கோவையில் மேலும் ஒரு செக்ஸ் ஜோதிடர் பெண்களிடம் தகாது நடந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கோவை தெலுங்குப்பாளையம் சி.வி.ஜி நகரில் ஜோதிட வசிய நிலையம் நடத்திவருபவர் வி.டி. ஈசுவரன்.

10 ஆண்டுகளாக குழந்தையின்மை, குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை,  தீராத நோய்களுக்குத் தீர்வு, தீராத வலிக்குத் தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வருவதாகக் கூறி அவர் கடை விரித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரிகா (வயது 47), பாக்கியலட்சுமி (47) ஆகிய 2 பெண்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு குறி கேட்பதற்காக சென்றனர்.
ஜோதிட நிலையத்தில் வி.டி.ஈஸ்வரன் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார். பின்னர் இருவரிடமும் தனிமையில் தியானம் செய்து நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதன்படி சந்திரிகா, பாக்கியலட்சுமி ஆகிய 2 பேரையும் தனிதனியாக அமர வைத்து செக்ஸ் குறித்து பேசி பாலியல் உணர்வுகளைத் தூண்டி உள்ளார். தொடர்ந்து விளக்குகளை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
2 பேரும் அதற்கு இணங்க மறுத்து தப்பி வந்துவிட்டனர். இதுகுறித்து 2 பேரும் மாநகரக் காவல் ஆணையர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் காவல் துறையினர் அதிரடியாக சென்று செக்ஸ் ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனைக் கைது செய்தனர்.
"10-ம் வகுப்பு மட்டுமே படித்த ஈஸ்வரன்  வயிற்று பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சித்த மருத்துவ நிலையம் தொடங்கி உள்ளார். பின்னர் தன்னை ஜோதிடர் என்று சொல்லிக் கொண்டு குறி சொல்லத் தொடங்க முன்னரைவிட அதிக காசு அதில் கொட்டியுள்ளது. அதோடு, தன்னை நம்பி வரும் பெண்களின் கூட்டம் அதிகமானவுடன் அவருக்குச் சபலம் தட்ட ஆரம்பித்துள்ளது.
தன்னை நம்பி வரும் பெண்களிடம் பாலுணர்வைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்குக் கூட்டிச் சென்று "சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்" என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார். இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார்.
ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார். யார் யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார்.
தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார்.
பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையைத் தூண்டுவார்.
யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதைக் கெடுத்து அவர்களுக்குத் தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையைத் தீர்த்து கொள்வார்.
எந்தப் பெண்களாவது இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் பில்லி, சூனியம் வைத்து விடுவேன். பிறகு கைகள் செயல் இழந்து ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி உள்ளார். இதனால் யாரும் காவல்துறையில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர்.
நாளொன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாகவும் கூறி கோர்ட் ஷூட் போட்டுக் கொண்டு ஒரு சில வசதி படைத்த பெண்களிடமும் தன் கைவரிசையைக் காட்டி உள்ளார்.
செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். டி.வி.க்களில் வசிய ஆலோசனை வழங்குவதாக கூறியே பல பெண்களை வெளியூர்களில் இருந்து தன்னைத் தேடி வரவழைத்துள்ளார். அதன்படி காதலனை வசியபடுத்த மை தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் எல்லை மீறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்று மாநகர காவல் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
source: inneram.com 
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out